விஜய் படத்துக்காக பிரபாஸ் படத்தை வேண்டாம் என சொன்ன ஒளிப்பதிவாளர்! அதிர்ச்சியில் திரையுலகம்!

சனி, 12 செப்டம்பர் 2020 (08:17 IST)
விஜய் 65 படத்தில் பணிபுரிவதற்காக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் ராதேஷ்யாம் படத்தில் இருந்து மனோஜ் பரமஹம்சா விலகியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் ஷூட்டிங்கும் விஜய் படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடக்க இருப்பதால், பிரபாஸ் படத்தில் இருந்து விலகி விஜய் 65 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இந்தியா முழுவதும் ரிலிஸாக இருக்கும் பிரபாஸ் படத்தை விட்டு விஜய் படத்துக்கு வந்துள்ளாரே என திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்