புறநகர் பகுதிகளிலும் காட்சிகள்… தமிழ் நாட்டில் கலக்கும் மஞ்சும்மள் பாய்ஸ்!

vinoth

வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:28 IST)
கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் பல நாஸ்டால்ஜிக்கான தருணங்களை நினைவுப் படுத்தியுள்ளனர். குறிப்பாக படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் தமிழகத்தின் புறநகர் பகுதிகளில் கூட இந்த படத்தை திரையரங்குகள் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளன. சென்னையில் உள்ள பெரிய மல்டிபிளக்ஸ் திரைகளில் மெய்ன் திரைக்கு படத்தை மாற்றியுள்ளனர்.  மேலும் பல தியேட்டர்கள் இந்த படத்துக்கான காட்சியை அதிகரித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்