மின்னல் வேகத்தில் முடிந்த நண்பகல் நேரத்து மயக்கம் படப்பிடிப்பு!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:52 IST)
இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கும் அடுத்த படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் டப்பிங் உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்