மகேஷ் பாபு ஒரு வாரமா தூங்கலையாம்…

திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:46 IST)
‘கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம், இந்த வாரம் ரிலீஸாகிறது. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

“இந்தப் படத்தால், கடந்த ஒரு வாரமாக எனக்கு தூக்கமே வரவில்லை. என்னுடைய இதயம் 10 மடங்கு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ள மகேஷ் பாபு, “ஏ.ஆர்.முருகதாஸுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் ரிலீஸான பிறகு எஸ்.ஜே.சூர்யாவை எல்லோரும் கொண்டாடுவார்கள்” எனவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்