சிம்புவின் ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பாளர் அறிவிப்பு!

செவ்வாய், 11 மே 2021 (08:58 IST)
சிம்பு கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இந்த பாடலை சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இந்த பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
‘மாநாடு’ இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
 
இன்னொரு தேதியில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.
 
கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்