தன்னுடைய அடுத்த நாவலை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ… ரசிகர்கள் வாழ்த்து!

vinoth

வியாழன், 19 ஜூன் 2025 (08:58 IST)
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப் பற்று ஆகியப் படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லாப் படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.

ஆனாலும் அவர் மற்ற நடிகர்கள் போல வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இந்நிலையில் மன அழுத்தத்துக்கு உள்ளான அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவர் உடல் இளைத்துக் காணப்படும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகக் கருத்துகள் எழுந்தன.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக அவரது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து எந்த பதிவும் வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்ரீ தனது அடுத்த நாவலான “May Eye come in?” என்பதை அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய தற்போதையப் புகைப்படத்தையும் அவர் வெளியிடுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் மீண்டு வந்தது குறித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்