நாங்க பிரிய இது தான் காரணம் - முதன்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

சனி, 25 பிப்ரவரி 2023 (06:40 IST)
நடிகை லாஸ்லியா கவினை ஓரிந்ததற்கின காரணத்தை முதன்முறையாக கூறியுள்ளார். 
 
இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். 
 
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் பிரிந்து அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 
 
கவின் தற்போது டாடா படத்தின் மாபெரும் வெற்றியை படைத்தது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இந்நிலையில் நடிகை லாஸ்லியா கவினை பிரிந்ததற்கான காரணத்தை முதன்முறையாக கூறியுள்ளார். 
 
அதாவது லாஸ்லியா காதலுக்கு அவரது அப்பா எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இருவரும் பிரிந்ததாக கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்