மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
இந்நிலையில் கைதி படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் லோகேஷும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு கார்த்தி & லோகேஷின் தற்போதைய கமிட்மெண்ட்களேக் காரணம் என சொல்லப்படுகிறது.