மீண்டும் தாமதம் ஆகும் கார்த்தி & லோகேஷ் கூட்டணியின் கைதி 2… காரணம் என்ன?

vinoth

சனி, 15 மார்ச் 2025 (10:13 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கைதி படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனமும்  இயக்குனர் லோகேஷும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு கார்த்தி & லோகேஷின் தற்போதைய கமிட்மெண்ட்களேக் காரணம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்