லோகேஷ் ஆமீர் கான் சந்திப்பில் பேசியது என்ன?

vinoth

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:57 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் இணந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் லோகேஷ் அடுத்தடுத்து கைதி 2 மற்றும் கமல்ஹாசனுடன் மீண்டும் ஒரு படம் என பிஸியாக இருப்பதால் தனது கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு அதன் பின்னர் தான் ஒரு படம் இயக்கித் தருவதாக லோகேஷ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்