கேஜிஎப் இயக்குனர் கதை எழுதும் அடுத்த திரைப்படம் – பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (11:18 IST)
கேஜிஎப் படத்தைத் தயாரித்து வரும் ஹோம்பளே நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அந்த படத்தின் இயக்குனர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் இப்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல உள்ளனர். கேஜிஎஃப் திரைப்படத்தை அடுத்து இப்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளது.

இதையடுத்து இப்போது பிரசாந்த் நீல் கதை எழுதி ஸ்ரீமுரளி நடிக்கும் பகீரா படத்தை தயாரிக்க உள்ளதாக  அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்க உள்ளார் சூரி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்