’’தேர்தலுக்கு தயார்..’’..ம.நீ.ம கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த கமல்ஹாசன்

சனி, 12 டிசம்பர் 2020 (17:14 IST)
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிமுக,திமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளுக்கும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.

இதற்கு மாற்றாக சீமானின் நாம் தமிழர் கட்சி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் , ரஜினியின் புதிய கட்சி ஆகியவை அடுத்தவருடம் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிதாக மாநில நிர்வாகிகளை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நியமித்துள்ளார்.

இதில் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் பத்மபிரியா,  பொறியாளர் அணி செயலாளர் வைத்தீஸ்வரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,ஊடகம் மற்றும் செய்தித்தொடர்ப்பு செயலராக சையத் சயிபுதின் , தலைமை நிமைமை பரப்புரையாளராக அருணாச்சலம் உள்ளிட்டோர் இன்று நியமிக்கப்படுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்குத் தொண்டர்கள் ஒத்துழைக்குமாறு கமல்ஹாசன் வேண்டுக்கோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்