’காத்துவாக்குல ரெண்டு காதல்: பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

வியாழன், 10 டிசம்பர் 2020 (11:51 IST)
’காத்துவாக்குல ரெண்டு காதல்: பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது
 
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட பூஜையில் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்டனர். நயன்தாரா மற்றும் அனிருத் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும், தொடர்ச்சியாக ஒரு மாதம் சென்னையில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் விரைவில் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார்.

The shooting of #MakkalSelvan @VijaySethuOffl's much awaited #KaathuvaakulaRenduKaadhal commenced with a pooja today

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்