பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

vinoth

வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:11 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த பட ப்ரமோஷனுக்கான சென்னை வந்துள்ள ஜூனியர் என் டி ஆர் அளித்துள்ள நேர்காணலில் அடுத்து தான் நடிக்கும் பிரசாந்த் நீல் படம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன கதை பிடித்ததால்தான் அந்த படத்தில் நடிக்கிறேன். ஆர் ஆர் ஆர் படம் மேற்கத்திய ரசிகர்களுக்குப் பிடித்தது என்பதால் அவர்களை மேலும் கவரவேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு கதைகளைத் தேர்வு செய்வதில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்