அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 இயக்குனர்களோடு 10 படங்கள்… அறிவிப்பை வெளியிட்ட வேல்ஸ் பிலிம்ஸ்!

vinoth

வெள்ளி, 27 ஜூன் 2025 (13:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம். பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவந்த ஐசரி கணேஷ் தமிழ் சினிமாவில் கால்பதித்து இதுவரை பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அது முதற்கொண்டு அதிகளவில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான காணொளித் துணுக்கைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுந்தர் சி, மாரி செல்வராஜ், பிரேம்குமார், விக்னேஷ் ராஜா, கணேஷ் கே பாபு, ஜூட் ஆண்டனி ஜோசப்,  செல்லா அய்யாவு மற்றும் அருண் ராஜா காமராஜ் ஆகியொர் இடம்பெற்றுள்ளனர்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vels Film International (@velsfilmintl)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்