உறுதியானதா சிம்பு கௌதம் மேனன் படம் ? இந்த படத்தின் பார்ட் 2 வா!

வியாழன், 10 டிசம்பர் 2020 (11:31 IST)
சிம்பு மற்றும் கௌதம் மேனன் மீண்டும் இணையும் படம் கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் இப்பொது ஐசரி வேலன் தயாரிப்பில் தொடர்ந்து படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதில் ஒரு படமாக வருணை வைத்து இமைபோல காக்க என்ற படத்தின் பெரும் பகுதியை முடித்துள்ளார். அதையடுத்து அடுத்த படமாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இப்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். அனேகமாக அந்த படம் இருவரும் இணைந்து உருவாக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source வலைப்பேச்சு 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்