தனது சிறுகதையை படமாக்குகிறாரா மாரி செல்வராஜ்… வாழை திரைப்படம் குறித்து பரவும் தகவல்!

செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:59 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதைதான்  வாழை திரைப்படம் என சொல்லப்படுகிறது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான போஸ்டரிலும், சிறுவர்கள் வாழைத் தோப்புக்கு அருகே நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்