இந்தியாவிடம் எப்போதுமே 50 சர்வதேச வீரர்கள் உள்ளனர்… இன்சமாம் உல் ஹக் பாராட்டு!

சனி, 22 மே 2021 (09:26 IST)
இந்தியாவிடம் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 50 வீரர்களாவது இருக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்காக செல்ல உள்ள நிலையில் அதே நேரத்தில் இலங்கைக்கு மற்றொரு அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்கிறது. இதன் மூலம் இரண்டு சர்வதேச அணிகளை இந்தியா உருவாக்கியுள்ளது என பாராட்டுகள் கிடைக்கின்றன. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் கோலோச்சிய போது கூட செய்ய முடியாததை இப்போது இந்தியா செய்துள்ளது. இதனை இந்தியா வெற்றிகரமாக கொண்டு செல்லும் என நம்புகிறேன். ஏனென்றால் இந்தியாவிடம் எப்போதுமே 50 சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்