விதிகளை மீறியது அம்பலம்..? விரைவில் அறிக்கை! – விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு நெருக்கடி!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:53 IST)
விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து முடிந்திருந்த நிலையில், திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

ALSO READ: ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! – முடிவுக்கு வந்த கொரோனா?

முதலில் வாடகைத்தாய் முறையில் விக்னேஷ்சிவன் தம்பதிக்கு குழந்தை பெற உதவிய மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை விசாரணை குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்