வீடு முற்றுகை - விஷாலை விடாத கருப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (10:29 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை வரவேற்ற விஷாலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.


 


தமிழர் வீர விளையாட்டு மீட்புக்குழுமத்தினர், விஷால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது கொடும்பாவியை எரிப்போம் என்று கூறியிருந்தனர்.
 
அதன்படி திருச்சியில் அந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் விஷால் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
 
ஆனாலும், சமாதானமாகாத போராட்டக் குழுவினர், விஷால் படங்கள் திரையிடும் திரையரங்குகளின் முன்பு போராட்டம் நடத்துவோம், விஷால் வீட்டை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்து உள்ளனர். விஷால் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நீடிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்