‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

புதன், 11 அக்டோபர் 2017 (12:47 IST)
‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில், கெளதம் மேனன் நடிக்கிறார்.



 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலி சோடா 2’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, கிஷோர், பரத் சீனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கதையை எழுதும்போதே, இந்த கேரக்டரில் கெளதம் மேனன் தான் நடிக்கணும் என முடிவு செய்துவிட்டாராம் விஜய் மில்டன். கெளதமும் ஓகே சொல்லிவிட்டார். ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் கெளதம் மேனன் போர்ஷன் முடிந்துவிடும். முன்னதாக, இந்தப் படத்தின் டீஸருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்