பிரபல பாடகர் எஸ்.பி. பி-யின் அம்மா காலமானார்

திங்கள், 4 பிப்ரவரி 2019 (14:41 IST)
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரணியம் குடும்பத்தின் தூண் இன்று சரிந்துவிட்டது. 


 
தென்னிந்திய திரையிசைப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  ஒரு பாடகராக மட்டுமில்லாது இசையமைப்பாளர், நடிகர், பட தயாரிப்பாளர், டப்பிங் என பல வேலைகளை சினிமாவில் செய்திருப்பவர். அவரின் தாயார் சகுந்தலம்மா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 89.
 
ஆந்திராவில்  உள்ள நெல்லூரில் வசித்து வந்த அவருக்கு  கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. 
 
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் , மகன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசைக் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். ஆகவே இறுதிச்சடங்கு கொஞ்சம் தாமதமாகும் எந்திரிக்கின்றனர் உறவினர்கள்.
 
நெல்லூரில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலம்மா உடலுக்கு குடும்ப உறவினர்கள், திரைத்துறையினர், நண்பர்கள் எனப் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

 
எஸ்.பி.பி வந்துவிட்டால் இன்று மாலையே  இறுதிச் சடங்கு நடைபெறும் என்கின்றனர் உறவினர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்