ஜெய் பீம் வெற்றி… எதற்கும் துணிந்தவன் படத்துக்கு செம்ம டிமாண்ட்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:27 IST)
எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்காக நிறைய போட்டிகள் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் உள்ளது. இதனால் அதிகளவில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படத்தின் உரிமையை போட்டி போட்டு வாங்க முன்வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்