ஒரே நேரத்தில் மலையாளம் & இந்தியில் தொடங்கும் ‘த்ரிஷ்யம்’ ஷூட்டிங்!

vinoth

திங்கள், 23 ஜூன் 2025 (10:53 IST)
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதத்தில் த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக மோகன்லால் உறுதி செய்துள்ளார். இந்த முறை மலையாளம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்