வெங்கட் பிரபு என் கதையை திருடிவிட்டார்… இயக்குனர் சசிதரன் புகார்!

புதன், 3 பிப்ரவரி 2021 (17:01 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸான லைவ் டெலிகாஸ்ட் தன்னுடைய கதை என்று இயக்குனர் சசிதரன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதைப் பற்றி கூறியுள்ள வெங்கட் பிரபு ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் முதல் முதலாக எழுதிய திரைக்கதை லைவ் டெலிகாஸ்ட்தான். அப்போது என்னால் அதை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் இப்போது வெப் சீரிஸாக உருவாகி உங்கள் பார்வைக்கு வர உள்ளது எனக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை இயக்குவதற்கு முன்னதாக நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கைவிடப்பட்டது.’எனக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அந்த கதை என்னுடையது என்று அட்டகத்தி தினேஷை வைத்து வாராயோ வெண்ணிலாவே என்ற திரைப்படத்தை இயக்கிய சசிதரன் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்