முதல் படத்தில் மட்டும் அது நடந்துவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் – இயக்குனர் மிஷ்கின்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:51 IST)
இயக்குனர் மிஷ்கின் ஜி வி பிரகாஷ்குமார் நடிக்கும் செல்பி படத்தின் ப்ரமொஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் நடித்துள்ள செல்பி படம் விரைவில் ரிலிஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறனின் இணை இயக்குனரும் அசுரன் படத்தின் திரைக்கதை எழுத்தாளருமான மதிமாறன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. நீட் தேர்வுக்குப் பின்னர் கல்லூரிகளில் எப்படி கல்வி வியாபாரப் பொருளாக மாறியுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டும் விதமாக இந்த படம் உருவாகி இருப்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது. கௌதம் மேனன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் கவனிக்கத்தக்க படைப்பாக இருக்குமென்று நம்பும் விதமாக டிரைலர் அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் ‘முதல் படம் வெற்றி பெற்றுவிட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது. அடுத்த படத்தில் உலகத்தையே மாற்றவேண்டும் என நினைக்கிறார்கள். நானும் அப்படிதான் இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்