இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சர்ச்சையான திரைப்படங்களான திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான படங்களாக அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.