சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.
இந்நிலையில் அஞ்சான் படத்தினை மறு படத்தொகுப்பு செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் வேலைகளில் இயக்குனர் லிங்குசாமி இறங்கியுள்ளார். அதில் “அஞ்சான் படத்தை இந்தியில் வாங்கிய மனிஷ் என்பவர் அதை வேறுவிதமாக எடிட் செய்து ரிலீஸ் செய்து வெற்றி பெற்றார். அதைப் பார்த்த போது நமக்கு இது தோன்றவில்லையே என எனக்குத் தோன்றியது. அந்த வெர்ஷனைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.