முதலமைச்சருக்கு நன்றி – இயக்குனர் பாரதிராஜா மகிழ்ச்சி!

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:58 IST)
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக் முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

தமிழகத்தில் சினிமா திரையரங்குகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 60 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இயக்குனரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா ‘திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்