ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது.
அதில் கலந்துகொண்டு இயக்குனர் பாலா பேசியது கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் விமர்சனர்களின் பாதம் தொட்டு ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு சேருங்கள். ஏனென்றால் ராம் மாதிரி ஒரு இயக்குனர் தமிழ்நாட்டுக்குத் தேவை. இந்த படம் என்னை மிகவும் பாதித்தது” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.