தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

vinoth

வெள்ளி, 27 ஜூன் 2025 (12:32 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா தான் வெகு நாட்களாக இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட கில்லர் படத்தினை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்துக்காக எஸ் ஜே சூர்யா வெளிநாட்டில் இருந்து ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும் எந்த நகர்வும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது படத்தை கோகுலம் மூவிஸ் கோபாலன் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இது சம்மந்தமாக தயாரிப்பாளரோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இசை’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் எஸ் ஜே சூர்யா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்