சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர்… மூத்த பாலிவுட் நடிகர் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:16 IST)
சல்மான் கானை பாம்பு கடித்ததை அறிந்து மூத்த நடிகர் தர்மேந்திரா அவருக்கு தொலைபேசி செய்து பேசியுள்ளார்.

இந்தியில் பிரபல நடிகராக உள்ளவர் சல்மான்கான். நேற்று தனது பண்ணை வீட்டில் இருந்த சல்மான்கானை பாம்பு கடித்ததால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்க அளித்த சல்மான்கான் “நான் எனது பண்ணை வீட்டில் இருந்தபோது பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. நான் ஒரு குச்சியில் அதை எடுத்து வெளியே விட முயன்றேன். அப்போது அது என்னை கடித்துவிட்டது. தொடர்ந்து மூன்று முறை என்னை கடித்தது. அது ஒருவகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் சிகிச்சை பெற்றேன், இப்போது நலமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்த இப்போது மூத்த நடிகரான தர்மேந்திரா தன்னுடைய டிவிட்டில் ‘சல்மான் கான் என் மகன் போன்றவர். அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நான் பிரார்த்திக்கிறேன். அவரும் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவரைப் பாம்பு கடித்த செய்தியை அறிந்து கவலைப்பட்டு அவரை தொடர்பு கொண்டு பேசினேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்