தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தை அதிக விலைக் கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி!

ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:58 IST)
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு நானே வருவேன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து நானே வருவேன் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அதன் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்