தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். அப்போது அவரை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். அதனால் பல ஆண்டுகள் அவர்கள் பெற்றோருடன் பேசாமல் வாழ்ந்து வந்தார்.
இந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் தற்போது தேவயானி பற்றி சீக்ரெட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் “கோலங்கள் சீரியல் தமிழகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. அப்போது வந்த பல சினிமா வாய்ப்புகளை தேவயானி மறுத்துவிட்டார். வரலாறு படத்தில் கூட அஜித்துக்கு (தந்தை கதாபாத்திரத்துக்கு) நடிக்க கே எஸ் ரவிக்குமார் அழைத்தார். ஆனால் தேவயானி அந்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.