பிரபல நடிகைக்குக் கொரோனா தொற்று.. ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 21 ஏப்ரல் 2021 (18:05 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் வழக்கு எண் 18/9 . இப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் மனிஷாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

எனக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் இதிலிருந்து நான் மீண்டு விடுவேன்.  இத்தொற்றால் எனக்கு லேசாக மூச்சுத் திணறல் உண்டாகிறது.  இதிலிருந்து முழுவதுமாக தாண்டிவருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்