பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகும் இயக்குனர் பாலாஜி சக்திவேல்!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:20 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இரண்டு கட்டங்களாக நடத்தி முடித்தார். படத்தில் நடிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட நடிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் அதன் பின் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிப்பதாக சொல்லப்படுகிற்து. இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது பாலாஜி சக்திவேல் என்பது உறுதியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்துக்காக பாலாஜி சக்திவேல் நீண்ட தாடி வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்