அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வளவு பெரிய தொகையை வசூலித்தாலும் குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம்தான் வரும் என்று சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். ஏனென்றால் இந்த படத்துக்கு அஜித்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம்தான் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்துக்கு 163 ஜோடி ரூபாய் கொடுத்ததால் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகவும், அதனால் படத்தின் வியாபாரத்தின் போதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.