கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது– சாருஹாசன்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (16:34 IST)
கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது என கமலின் சகோதரரான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.


 


தமிழக அரசில் நிலவும் பிரச்னைகள், ஊழல்கள் குறித்து, கடந்த சில நாட்களாக காட்டமாகவே பதிவிட்டு வருகிறார் கமல். அவருக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கமலின் அண்ணனான சாருஹாசன், “ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஜெயலலிதாவின் பேரில் ஆட்சி செய்கிறீர்கள். சிறைக்குச் சென்றுள்ள சசிகலா சொல்படி ஆட்சி செய்கிறீர்கள்…” என்று தன் பங்கிற்கு ஃபேஸ்புக்கில் அமைச்சர்களை வெளுத்து வாங்கினார். அத்துடன், “கமல் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால், அவரால் ஒருத்தரைக் கூட திருத்த முடியாது. பெரியாரின் நேர்மையைக் கூட ஒப்புக் கொள்ளாதவர்கள் தமிழ் மக்கள்” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்