ஷங்கர் –ராம்சரண் படத்திற்கு மிகப்பெரிய வியாபாரம்!

சனி, 18 ஜூன் 2022 (17:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி   இயக்குனர்  ஷங்கர்  நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல்  வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி  வரும் ஒரு  புதிய  தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். கியாரா  அத்வானி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

விஜய்66 படத்தை தயாரிக்கும் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கும் நிலையில் மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில்,  இப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், இப்படத்தின் பெயர் ‘அதிகாரி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அ ந்நியன்,இந்தியன் போன்ற படங்களைப் போன்று இப்படமும் ஒரு சமூக கருத்துள்ள படமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இப்படத்தை ஜீ நிறுவனம் சுமார் ரூ.300 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும், இப்படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தெலுங்கு சினிமாவில் இப்படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. நிச்சயமமாக இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என எதிர்பார்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்