டி.ராஜேந்தர் பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன்: இயக்குநர் பாரதிராஜா

செவ்வாய், 24 மே 2022 (19:40 IST)
உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் டி ராஜேந்தர் அவர்கள் பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார் 
 
இயக்குநர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற உள்ளார்
 
இந்த நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பேரன்பு கொண்ட சகோதரர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் அவர் பூரண நலம் பெற்று தமிழுக்கும் தமிழ் திரையுலகிற்கும் தொடர்ந்து சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்