ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம்: பாரதிராஜா

வியாழன், 12 மே 2022 (10:47 IST)
ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம் என பாரதிராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழர்களை அனைத்து பதவிகளிலும் உட்கார வைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம் என்று கவிதை வடிவில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
என் இனிய தமிழ் மக்களே
நம் குழந்தை செல்வங்களை
தொடக்கப் பள்ளியில்
இருந்து உயர்கல்விவரை
தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில்
கல்வி பயிற்றுவித்து
அரசு வேலைவாய்ப்புகளிலும்
ஆட்சி,அதிகார மையங்களிலும்
தமிழனை அமரவைத்து
அழகு பார்ப்போம்.
நம் தமிழ் மொழியை
போற்றி பாதுகாப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்