சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பென்னி தயாள்!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவரகளில் ஒருவராக இருந்த பென்னி தயாள் விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. அதனால் 7 சீசன்களை கடந்து இப்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த சீசனின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பென்னி தயாள் பாதியிலேயே விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரின் சமூகவலைதளப் பகுதியில் ‘இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். அனைத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்.’ எனக் கூறியுள்ளதுதான் இந்த யூகங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்