ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழ் மொழித் தாண்டியும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார் ஆதிக்.
இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா குட் பேட் அக்லி படத்தைப் பார்த்துவிட்டு அவரை அழைத்துக் கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் பாலகிருஷ்ணா-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் ஒரு படம் பற்றிய அப்டேட் வரலாம் என்று சொல்லப்படுகிறது.