தள்ளிப் போகிறதா சூர்யா பாலா திரைப்படம்… சூர்யா எடுத்த முடிவு!

வியாழன், 13 ஜனவரி 2022 (10:10 IST)
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார். இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது பிஸியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இயக்குனர் விஜி ஏற்றுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை இறுதிவடிவம் இன்னும் முழுமை பெறாததால் படப்பிடிப்பு மேலும் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் முதலில் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் பாலா படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்