வெளியானது ‘பாகுபலி-The epic’ படத்தின் டிரைலர்..!

vinoth

ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (10:47 IST)
இந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் பேன் இந்தியா என்ற வகைமையை முதல் முதலில் உருவாக்கியதே ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம்தான். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு பாகங்களும் சேர்ந்து 3 மணி நேரம் 44 நிமிடம் ஓடுமளவுக்கு பாகுபலி மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பார்த்து ரசித்த பாகுபலி இரண்டு பாகங்களின் காட்சிகளை புதுவிதமாக கோர்த்து இந்த டிரைலரை வெளியிட்டுள்ளனர். இது படத்தை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்