தெலுங்கு மாஸ் ஹீரோ பக்கம் ஒதுங்கிய அட்லி… இனி எல்லாம் பேன் இந்தியா படம்தான்!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:00 IST)
இயக்குனர் அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இந்த படம் முடிந்ததும் அவர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வட இந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்