அரண்மணை பார்ட் 4 க்கு தயாராகிய சுந்தர் சி!

வியாழன், 22 ஜூலை 2021 (09:43 IST)
சுந்தர் சி அரண்மனை படத்தின் நான்காம் பாகத்துக்கு தயாராகியுள்ளாராம்.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலிஸாக உள்ள இந்த படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளையும் இப்போது தொடங்கியுள்ளாராம்.

மூன்றாம் பாகம் ரிலீஸாகமலேயே நான்காம் பாகத்துக்கான வேலைகளை தொடங்கி இருப்பது மூன்றாம் பாகத்தின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்