இன்னும் விஜய்யிடம் கதையே சொல்லவில்லையா? தர்பார் தோல்வியில் உஷாரான முருகதாஸ்!

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:08 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் அவர் விஜய்யிடம் கதை சொல்ல இருக்கிறார்.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் திரைப்படம் இப்போது ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த இயக்குனர்கள் பட்டியலில் சுதா கொங்கரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியவர்களின் பெயர்கள் இடம்பெற்று வந்தன. ஆனால் எதுவும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில் இப்போது விஜய், தனது மெஹா ஹிட் படமான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தின் தோல்வியை அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் முருகதாஸ் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தர்பார் தோல்வியால் எப்படியாவது வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். அதனால் வழக்கமாக தான் திரைக்கதைக்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விட அதிகமான நேரத்தை எடுத்து திரைக்கதை அமைத்துள்ளார். இந்நிலையில் மிக விரைவில் அவர் விஜய்யிடம் தன்னுடைய கதையை சொல்ல இருக்கிறாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்