தோனியுடன் திடீர் சந்திப்பை நடத்திய அமிதாப் பச்சன்!

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (08:45 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்து பேசியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. விளம்பரப்படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தோனி மற்றும் அமிதாப் ஆகிய இருவருமே அதிகளவில் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்