வேறு எந்த படத்திற்கு வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு மட்டும் வருகிறது? சீமான்

சனி, 14 அக்டோபர் 2023 (20:54 IST)
தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவையா ஜெயிலர் படத்துக்கு இல்லை.  லியோ படத்துக்கு மட்டும் ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியது: லியோ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தான். இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை? தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லாத ஒன்று.  ஏன் ‘ஜெயிலர்’ படத்துக்கு மட்டும் செய்யவில்லை?
 
இந்த அரசு விஜய்யை தொந்தரவு செய்வது அபட்டமாக தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்குக் கூட இவ்வளவு தொல்லைகள் இல்லை. அதுதான்  எனக்கு சந்தேகத்தை தருகிறது. சினிமா என்பது ஒரு வியாபாரம். வியாபாரம் பெருகிவிட்ட நிலையில், சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். ஆனால், அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். என்பதே எனது நோக்கம் எதிர்காலத்தில் எங்களுடைய ஆட்சி வரும்போது அதை நாங்கள்  சரி செய்வோம் என்று சீமான் தெரிவித்தார்.
 
லியோ படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகும் இப்படத்தை திரையிடும் போது, பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் .மற்றும் போக்குவரத்து சரியாக செல்ல  வேண்டும் என அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்கக் கூடாது  என  பல்வேறு கட்டுப்பாடுகளை திரையரங்க உரிமையாளர்களுக்கு தமிழக அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்