பல வருடங்களுக்கு பின் சுந்தர் சி ரீ எண்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை!

செவ்வாய், 16 நவம்பர் 2021 (15:43 IST)
இயக்குனர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம் மாளவிகா.

நாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நடிகையாக இருந்த மாளவிகாவை பிரபலமாக்கியது இரண்டு படங்கள். முதல் படம் திருட்டு பயலே. அந்த படத்தில் கணவனுக்கு தெரியாமல் அவரின் நண்பருடன் கள்ள உறவில் இருப்பவராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் சித்திரம் பேசுதே படத்தில் வாழ மீனுக்கும் பாடலில் ஆடியதன் மூலம் ஒரே நாளில் உலகம பேமஸ் ஆனார்.

அதன் பின்னர் ஒரு பாடலுக்கு ஆடுவது மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது என பிஸியாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் மூலம் தன்னுடைய மீள்வருகையை அவர் தொடங்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்